Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!


tirunAvukkaracar tEvAram
tirumuRai 6 part 2
(verses (509-981)
(in tamil script, TSCII format)
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த ௿
தேவாரப் பதிகங்கள்௿
ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி௿
பாடல்கள் (509 - 981)௿




Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. or

ன Project Madurai 1999 - 2003
to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/


திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த ௿
தேவாரப் பதிகங்கள்௿
ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி௿
பாடல்கள் (509 - 981)௿

உள்ளுறை
௿
6.051 திருவீழிமிழலை (509-519)மின்பதிப்பு
6.052 திருவீழிமிழலை (520-529)மின்பதிப்பு
6.053 திருவீழிமிழலை (530-540)மின்பதிப்பு
6.054 திருப்புள்ளிருக்குவேளூர் (541-550)மின்பதிப்பு
6.055 திருக்கயிலாயம் (551-561)மின்பதிப்பு
6.056 திருக்கயிலாயம் (562-571)மின்பதிப்பு
6.057 திருக்கயிலாயத்திருமலை (572-580)மின்பதிப்பு
6.058 திருவலம்புரம் (581-590)மின்பதிப்பு
6.059 திருவெண்ணி (591 -600)மின்பதிப்பு
6.060 திருக்கற்குடி (601-610)மின்பதிப்பு
6.061 திருக்கன்றாப்பூர் (611-619)மின்பதிப்பு
6.062 திருவானைக்கா (620-629)மின்பதிப்பு
6.063 திருவானைக்கா (630-639)மின்பதிப்பு
6.064 திருவேகம்பம் (640-650)மின்பதிப்பு
6.065 திருவேகம்பம் (651-660)மின்பதிப்பு
6.066 திருநாகேச்சரம் (661-670)மின்பதிப்பு
6.067 திருக்கீழ்வேளூர் (671-680)மின்பதிப்பு
6.068 திருமுதுகுன்றம் (681-690)மின்பதிப்பு
6.069 திருப்பள்ளியின்முக்கூடல் (691 -700)மின்பதிப்பு
6.070 க்ஷேத்திரக்கோவை (701-711)மின்பதிப்பு
6.071 திருஅடைவு (712-722)மின்பதிப்பு
6.072 திருவலஞ்சுழி (723)மின்பதிப்பு
6.073 திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர் (724-733)மின்பதிப்பு
6.074 திருநாரையூர் (734-743)மின்பதிப்பு
6.075 திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் (744-754)மின்பதிப்பு
6.076 திருப்புத்தூர் (755-764)மின்பதிப்பு
6.077 திருவாய்மூர் (765-774)மின்பதிப்பு
6.078 திருவாலங்காடு (775-784)மின்பதிப்பு
6.079 திருத்தலையாலங்காடு (785-794)மின்பதிப்பு
6.080 திருமாற்பேறு (795-804)மின்பதிப்பு
6.081 திருக்கோடிகா (805-812)மின்பதிப்பு
6.082 திருச்சாய்க்காடு (813-822)மின்பதிப்பு
6.083 திருப்பாசூர் (823-832)மின்பதிப்பு
6.084 திருச்செங்காட்டங்குடி (833-842)மின்பதிப்பு
6.085 திருமுண்டீச்சரம் (843-851)மின்பதிப்பு
6.086 திருவாலம்பொழில் (852-860)மின்பதிப்பு
6.087 திருச்சிவபுரம் (861-868)மின்பதிப்பு
6.088 திருவோமாம்புலியூர் (869-877)மின்பதிப்பு
6.089 திருவின்னம்பர் (878-887)மின்பதிப்பு
6.090 திருக்கஞ்சனூர் (888-897)மின்பதிப்பு
6.091 திருவெறும்பியூர் (898-907)மின்பதிப்பு
6.092 திருக்கழுக்குன்றம் (908-909)மின்பதிப்பு
6.093 பலவகைத் - திருத்தாண்டகம் (910-919)மின்பதிப்பு
6.094 நின்ற - திருத்தாண்டகம் (920-929)மின்பதிப்பு
6.095 தனி - திருத்தாண்டகம் (930-939)மின்பதிப்பு
6.096 தனி - திருத்தாண்டகம் (940-950)மின்பதிப்பு
6.097 திருவினாத் - திருத்தாண்டகம் (951-961)மின்பதிப்பு
6.098 திருமறுமாற்றத்-திருத்தாண்டகம் (962-971)மின்பதிப்பு
6.099 திருப்புகலூர் (972-981)மின்பதிப்பு

6.51 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்௿ ௿

திருச்சிற்றம்பலம்


509 கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் ௿
கந்தமா தனத்துளார் காளத் தியார்௿
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்௿
வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த௿
அயில்வாய சூலமுங் காபா லமும்௿
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி௿
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.1

510 பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்௿
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்௿
கேதிசர மேவினார் கேதா ரத்தார்௿
கெடில வடவதிகை வீரட் டத்தார்௿
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்௿
மழபாடி மேய மழுவா ளனார்௿
வேதி குடியுளார் மீயச் சூரார்௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.2

511 அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்௿
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்௿
உண்ணாழி கையார் உமையா ளோடும்௿
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்௿
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை௿
மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்௿
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த ௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.3

512 வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி ௿
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்௿
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்௿
பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர்௿
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி ௿
உரித்துரிவை போர்த்த விடலை வேடம்௿
விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.4

513 புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் ௿
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்௿
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற் ௿
றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்௿
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்௿
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்௿
விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ ௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.5

514 பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்௿
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்௿
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார் ௿
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்௿
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்௿
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்௿
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த ௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.6

515 மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்௿
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்௿
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்௿
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்௿
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் ௿
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்௿
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.7

516 அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்௿
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்௿
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்௿
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்௿
நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்௿
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்௿
வெஞ்சொdr சமண்சிறையி லென்னை மீட்டார்௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.8

517 கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்௿
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்௿
தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்௿
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்௿
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் ௿
வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்௿
வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.9

518 அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்௿
அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்௿
புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்௿
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி௿
எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்௿
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்௿
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.10

519 புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்௿
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க௿
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் ௿
தலைகளொடு மலைகளன தாளுந் தோளும்௿
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்௿
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்௿
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்௿
வீழி மிழலையே மேவி னாரே.
6.51.11
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.52 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


520 கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்௿
கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற௿
பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்௿
பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்௿
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்௿
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்௿
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.1

521 ஆலைப் படுகரும்பின் சாறு போல ௿
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்௿
சீல முடையடியார் சிந்தை யான்காண்௿
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்௿
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்௿
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்௿
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.2

522 தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்௿
சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்௿
கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்௿
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்௿
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்௿
இருவர்க் கெரியா யருளி னான்காண்௿
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.3

523 காதிசைந்த சங்கக் குழையி னான்காண்௿
கனக மலையனைய காட்சி யான்காண்௿
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்௿
வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்௿
ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்௿
ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்௿
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.4

524 நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்௿
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்௿
கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்௿
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்௿
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்௿
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்௿
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.5

525 கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்௿
கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்௿
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்௿
வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்௿
பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்௿
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்௿
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.6

526 கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி௿
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்௿
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்௿
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்௿
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்௿
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்௿
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.7

527 மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்௿
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்௿
பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி ௿
எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்௿
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை௿
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்௿
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் ௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.8

528 சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண்௿
தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்௿
இந்திரனைத் தோள்முறிவித் தருள்செய் தான்காண்௿
ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்௿
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்௿
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்௿
வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்௿
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
6.52.9

529 ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண்௿
எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்௿
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும் ௿
ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்௿
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்௿
கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்௿
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்௿
விண்ணிழிதண்வீழி மிழலை யானே.
6.52.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.53 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
௿

திருச்சிற்றம்பலம்


530 மானேறு கரமுடைய வரதர் போலும்௿
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்௿
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்௿
கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந்௿
தேனேறு திருஇதழித் தாரார் போலுந்௿
திருவீழி மிழலையமர் செல்வர் போலும்௿
ஆனேற தேறும் அழகர் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.1

531 சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச் ௿
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்௿
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்௿
நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங்௿
குமரனையும் மகனாக வுடையார் போலுங்௿
குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்௿
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.2

532 நீறணிந்த திருமேனி நிமலர் போலும்௿
நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்௿
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்௿
எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்௿
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்௿
வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்௿
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.3

533 கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்௿
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்௿
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந்௿
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்௿
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்௿
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்௿
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.4

534 துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ்௿
சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்௿
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்௿
பூதகணம் புடைசூழ வருவார் போலும்௿
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்௿
வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்௿
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.5

535 மாலாலும் அறிவரிய வரதர் போலும்௿
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்௿
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்௿
நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்௿
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.6

536 பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்௿
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்௿
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்௿
வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்௿
செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்௿
திருவீழி மிழலையமர் சிவனார் போலும்௿
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.7

537 குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங்௿
குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்௿
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்௿
புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்௿
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்௿
வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்௿
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.8

538 முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்௿
மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்௿
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்௿
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்௿
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.9

539 கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்௿
கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்௿
எரியதொரு கைதரித்த இறைவர் போலும்௿
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்௿
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்௿
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.10

540 கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக் ௿
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங்௿
குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் ௿
கூத்தாட வல்ல குழகர் போலும்௿
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்௿
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்௿
அயிலாய மூவிலைவேற் படையார் போலும்௿
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
6.53.11
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.54 திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


541 ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு௿
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்௿
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை௿
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்௿
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்௿
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு௿
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.1

542 சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே ௿
திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்௿
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் ௿
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்௿
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் ௿
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்௿
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.2

543 பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்௿
பாமாலை பாடப் பயில்வித் தானை௿
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை௿
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்௿
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை௿
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்௿
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.3

544 இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி௿
இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்௿
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்௿
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த௿
அருளானை ஆதிமா தவத்து ளானை௿
ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற௿
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.4

545 மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு ௿
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்௿
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்௿
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச௿
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை௿
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்௿
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.5

546 அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை ௿
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்௿
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்௿
கடல்நாகைக் காரோணங் கருதி னானை௿
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா ௿
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற௿
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.6

547 நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை௿
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற௿
விருப்பவனை வேதியனை வேத வித்தை௿
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி௿
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா ௿
இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்௿
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.7

548 பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் ௿
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்௿
வாராத செல்வம் வருவிப் பானை௿
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்௿
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்௿
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட௿
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.8

549 பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்௿
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை௿
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை௿
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்௿
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்௿
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்௿
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.9

550 இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்௿
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை௿
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்௿
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்௿
கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்௿
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை௿
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்௿
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
6.54.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.55 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


551 வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி௿
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி௿
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி௿
ஓவாத சத்தத் தொலியே போற்றி௿
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி௿
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி௿
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.1

552 பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி௿
பிறவி யறுக்கும் பிரானே போற்றி௿
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி௿
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
கச்சாக நாக மசைத்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.2

553 மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி௿
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி௿
திருவாகி நின்ற திறமே போற்றி௿
தேசம் பரவப் படுவாய் போற்றி௿
கருவாகி யோடு முகிலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.3

554 வானத்தார் போற்றும் மருந்தே போற்றி௿
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி௿
ஊனத்தை நீக்கு முடலே போற்றி௿
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி௿
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி௿
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி௿
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.4

555 ஊராகி நின்ற உலகே போற்றி௿
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி௿
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி௿
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
நீராவி யான நிழலே போற்றி௿
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி௿
காராகி நின்ற முகிலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.5

556 சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி௿
தேவ ரறியாத தேவே போற்றி௿
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி௿
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி௿
பற்றி உலகை விடாதாய் போற்றி௿
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.6

557 பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி௿
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி௿
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி௿
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி௿
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.7

558 இமையா துயிரா திருந்தாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி௿
ஊழியே ழான ஒருவா போற்றி௿
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி௿
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி௿
கமையாகி நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.8

559 மூவாய் பிறவாய் இறவாய் போற்றி௿
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி௿
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி௿
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி௿
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி௿
அல்லல் நலிய அலந்தேன் போற்றி௿
காவாய் கனகத் திரளே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.9

560 நெடிய விசும்போடு கண்ணே போற்றி௿
நீள அகல முடையாய் போற்றி௿
அடியும் முடியும் இகலி போற்றி௿
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி௿
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி௿
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி௿
கடிய உருமொடு மின்னே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.10

561 உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி௿
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி௿
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி௿
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி௿
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி௿
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி௿
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.55.11
௿
இத்தலம் வடநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - கைலாயநாதர்,௿ தேவியார் - பார்வதியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.56 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
௿

திருச்சிற்றம்பலம்


562 பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி௿
பூதப் படையாள் புனிதா போற்றி௿
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி௿
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி௿
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி௿
வானோர் வணங்கப் படுவாய் போற்றி௿
கறையுடைய கண்ட முடையாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.1

563 முன்பாகி நின்ற முதலே போற்றி௿
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி௿
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி௿
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி௿
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி௿
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி௿
கண்பாவி நின்ற கனலே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.2

564 மாலை யெழுந்த மதியே போற்றி௿
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி௿
மேலை வினைக ளறுப்பாய் போற்றி௿
மேலாடு திங்கள் முடியாய் போற்றி௿
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி௿
அடியார்கட் காரமுத மானாய் போற்றி௿
காலை முளைத்த கதிரே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.3

565 உடலின் வினைக ளறுப்பாய் போற்றி௿
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி௿
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி௿
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி௿
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி௿
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி௿
கடலி லொளியாய முத்தே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.4

566 மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி௿
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி௿
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி௿
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி௿
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி௿
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி௿
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.5

567 ஆறேறு சென்னி முடியாய் போற்றி௿
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி௿
நீறேறு மேனி யுடையாய் போற்றி௿
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி௿
கூறேறு மங்கை மழுவா போற்றி௿
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி௿
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.6

568 அண்டமே ழன்று கடந்தாய் போற்றி௿
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி௿
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி௿
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி௿
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி௿
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி௿
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.7

569 பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி௿
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி௿
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி௿
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி௿
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி௿
ஆரு மிகழப் படாதாய் போற்றி௿
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.8

570 செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி ௿
தேடி யுணராமை நின்றாய் போற்றி௿
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி௿
பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி௿
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி௿
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி௿
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.9

571 மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி௿
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி௿
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி ௿
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி௿
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று௿
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி௿
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.56.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.57 திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


572 பாட்டான நல்ல தொடையாய் போற்றி௿
பரிசை யறியாமை நின்றாய் போற்றி௿
சூட்டான திங்கள் முடியாய் போற்றி௿
தூமாலை மத்த மணிந்தாய் போற்றி௿
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி௿
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி௿
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.1

573 அதிரா வினைக ளறுப்பாய் போற்றி௿
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி௿
சதுரா சதுரக் குழையாய் போற்றி௿
சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி௿
எதிரா உலக மமைப்பாய் போற்றி௿
என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி௿
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.2

574 செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி௿
செல்லாத செல்வ முடையாய் போற்றி௿
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி௿
ஆகாச வண்ண முடியாய் போற்றி௿
வெய்யாய் தணியா யணியாய் போற்றி௿
வேளாத வேள்வி யுடையாய் போற்றி௿
கையார் தழலார் விடங்கா போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.3

575 ஆட்சி யுலகை யுடையாய் போற்றி௿
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி௿
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி௿
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி௿
மாட்சி பெரிது முடையாய் போற்றி௿
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி௿
காட்சி பெரிது மரியாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.4

576 முன்னியா நின்ற முதல்வா போற்றி௿
மூவாத மேனி யுடையாய் போற்றி௿
என்னியா யெந்தை பிரானே போற்றி௿
ஏழி னிசையே யுகப்பாய் போற்றி௿
மன்னிய மங்கை மணாளா போற்றி௿
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி௿
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.5

577 உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி௿
உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி௿
எரியாய தெய்வச் சுடரே போற்றி௿
ஏசுமா முண்டி யுடையாய் போற்றி௿
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி௿
அறிவே அடக்க முடையாய் போற்றி௿
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.6

578 எண்மேலும் எண்ண முடையாய் போற்றி௿
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி௿
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி௿
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி௿
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி௿
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி௿
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.7

579 முடியார் சடையின் மதியாய் போற்றி௿
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி௿
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி௿
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி௿
அடியா ரடிமை அறிவாய் போற்றி௿
அமரர் பதியாள வைத்தாய் போற்றி௿
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.8

580 போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி௿
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி௿
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி௿
எண்ணா யிரநூறு பேராய் போற்றி௿
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி௿
நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி௿
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி௿
கயிலை மலையானே போற்றி போற்றி.
6.57.9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6.57.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.58 திருவலம்புரம் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


581 மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை ௿
மறையவனும் வானவருஞ் சூழ நின்று௿
கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக் ௿
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே௿
பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் ௿
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல௿
மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.1

582 சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த ௿
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்௿
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்௿
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல௿
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்௿
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்௿
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம் ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.2

583 தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை ௿
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்௿
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல௿
அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்௿
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்௿
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி௿
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே.
6.58.3

584 மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி ௿
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்௿
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த ௿
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே௿
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்௿
புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ௿
வாவா வெனவுரைத்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.4

585 அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ௿
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்௿
புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப் ௿
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்௿
சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்௿
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல௿
மனமுருக வளைகழல மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.5

586 கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் ௿
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்௿
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி௿
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்௿
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் ௿
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ௿
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.6

587 பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் ௿
பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ௿
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க் ௿
கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி௿
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி௿
வேறோர் பதிபுகப் போவார் போல௿
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.7

588 பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும்௿
பழனம் பதிபழமை சொல்லி நின்றார்௿
நல்லார் நனிபள்ளி யின்று வைகி௿
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்௿
சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச்௿
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்௿
மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.8

589 பொங்கா டரவொன்று கையிற் கொண்டு௿
போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்௿
தங்கா ரொருவிடத்துந் தம்மேல் ஆர்வந் ௿
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்௿
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா௿
என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி௿
மங்குல் மதிதவழும் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.9

590 செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் ௿
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்௿
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற ௿
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ௿
அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி௿
அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்௿
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி ௿
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.58.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.59 திருவெண்ணி - திருத்தாண்டகம்௿ ௿

திருச்சிற்றம்பலம்


591 தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்௿
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்௿
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் ௿
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்௿
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்௿
வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்௿
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.1

592 நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்௿
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்௿
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்௿
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்௿
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்௿
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்௿
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.2

593 கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்௿
கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்௿
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்௿
பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்௿
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த ௿
திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்௿
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.3

594 சடையேறு புனல்வைத்த சதுர னாருந்௿
தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்௿
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி ௿
உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்௿
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த ௿
மயிலாடு துறையுறையும் மணாள னாரும்௿
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.4

595 மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி ௿
மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்௿
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்௿
பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்௿
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக் ௿
கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்௿
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.5

596 வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்௿
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்௿
கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்௿
குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்௿
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்௿
ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்௿
வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.6

597 மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி௿
மடவா ளவளோடு மானொன் றேந்திச்௿
சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்௿
சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்௿
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த ௿
காலன்றன் கால மறுப்பார் தாமும்௿
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.7

598 செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்௿
திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்௿
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்௿
ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்௿
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி ௿
மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்௿
வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.8

599 வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்௿
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்௿
களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்௿
கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்௿
உளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்௿
உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்௿
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.9

600 பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப் ௿
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்௿
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்௿
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்௿
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்௿
திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்௿
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்௿
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6.59.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர்,௿
தேவியார் - அழகியநாயகியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.60 திருக்கற்குடி - திருத்தாண்டகம்௿
௿

திருச்சிற்றம்பலம்


601 மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி ௿
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்௿
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக ௿
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ௿
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்௿
கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்௿
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் ௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.1

602 செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்௿
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை௿
ஐயானை நொய்யானைச் சீரி யானை௿
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்௿
மெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னை௿
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்௿
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.2

603 மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை௿
வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை௿
விண்ணதனி லொன்றை விரிக திரைத்௿
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க௿
எண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன் ௿
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்௿
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.3

604 நற்றவனைப் புற்றரவ நாணி னானை௿
நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை௿
முற்றவனை மூவாத மேனி யானை௿
முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்௿
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற ௿
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்௿
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.4

605 சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்௿
சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்௿
அங்கையனை அங்கமணி ஆகத் தானை௿
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த௿
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின் ௿
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்௿
கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.5

606 பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்௿
பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி௿
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை௿
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்௿
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்௿
பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்௿
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.6

607 பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்௿
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்௿
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை௿
ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா௿
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் ௿
வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்௿
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.7

608 வானவனை வானவர்க்கு மேலா னானை௿
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க௿
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்௿
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்௿
கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்௿
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல௿
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.8

609 கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்௿
கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த௿
சிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்௿
திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த௿
தலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்௿
தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து௿
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.9

610 பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்௿
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை௿
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை௿
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை௿
அழலாடு மேனியனை அன்று சென்றக் ௿
குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்௿
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.60.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - முத்தீசர்,௿
தேவியார் - அஞ்சனாட்சியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.61 திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


611 மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா௿
மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்௿
நாதனே யென்றென்று பரவி நாளும் ௿
நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து௿
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு௿
வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்௿
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.1

612 விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி௿
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்௿
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்௿
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்௿
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்௿
சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்௿
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.2

613 எவரேனுந் தாமாக விலாடத் திட்ட ௿
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி௿
உவராதே அவரவரைக் கண்ட போது ௿
உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி௿
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி ௿
இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்௿
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.3

614 இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் ௿
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு௿
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு௿
மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்௿
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் ௿
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்௿
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.4

615 விருத்தனே வேலைவிட முண்ட கண்டா௿
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்௿
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி௿
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்௿
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் ௿
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்௿
கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.5

616 பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் ௿
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று௿
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்௿
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்௿
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்௿
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்௿
கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.6

617 ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ௿
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி௿
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி௿
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்௿
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு௿
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்௿
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.7

618 திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்௿
திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்௿
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்௿
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்௿
பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா௿
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்௿
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6.61.9

619 குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்௿
கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்௿
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்௿
தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி௿
முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும் ௿
முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்௿
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே ௿
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
6.61.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - நடுதறிநன்னாயகர்,௿
தேவியார் - மாதுமைநாயகியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.62 திருவானைக்கா - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


620 எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்௿
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்௿
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை௿
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்௿
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் ௿
திருவானைக் காவுடைய செல்வா என்றன்௿
அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.1

621 ஊனாகி உயிராகி யதனுள் நின்ற ௿
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்௿
நானேதும் அறியாமே யென்னுள் வந்து௿
நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்௿
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்௿
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்௿
ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.2

622 ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்௿
ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று௿
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் ௿
திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்௿
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை ௿
ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்௿
அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.3

623 நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா௿
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்௿
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்௿
முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்௿
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா௿
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்௿
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.4

624 இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்௿
திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்௿
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து௿
காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்௿
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த ௿
வேதியனே தென்னானைக் காவுள் மேய௿
அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.5

625 உரையாரும் புகழானே ஒற்றி யூராய்௿
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்௿
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்௿
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்௿
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு ௿
திருவானைக் காவிலுறை தேனே வானோர்௿
அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.6

626 மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்௿
மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்௿
கையானே காலனுடல் மாளச் செற்ற ௿
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்௿
செய்யானே திருமேனி யரியாய் தேவர்௿
குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய௿
ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.7

627 இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே௿
எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று௿
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே௿
தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த௿
சிலையானே திருவானைக் காவுள் மேய ௿
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்௿
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.8

628 விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத௿
நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்௿
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்௿
என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்௿
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்௿
கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய௿
அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.9

629 கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்௿
குறட்பூதங் கூத்தாட நீயு மாடி௿
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா௿
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்௿
படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப் ௿
பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த௿
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்௿
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
6.62.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.63 திருவானைக்கா - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


630 முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை௿
மூவாத சிந்தையே மனமே வாக்கே௿
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்௿
சார்தற் கரியானைத் தாதை தன்னை௿
என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை௿
எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்௿
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.1

631 மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை௿
வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்௿
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை௿
இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்௿
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்௿
கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்௿
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.2

632 முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை௿
முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்௿
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை௿
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்௿
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்௿
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்௿
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.3

633 காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்௿
காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்௿
தாரானைப் புலியதளி னாடை யானைத்௿
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்௿
பேரானை மணியார மார்பி னானைப்௿
பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட௿
தேரானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.4

634 பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்௿
புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக௿
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை௿
ஏறமரும் பெருமானை இடமா னேந்து௿
கையானைக் கங்காள வேடத் தானைக்௿
கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்௿
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.5

635 கலையானைப் பாசுபதப் பாணி யானைக்௿
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க௿
மலையானை யென்றலையி னுச்சி யானை௿
வார்தருபுன் சடையானை மயான மன்னும்௿
நிலையானை வரியரவு நாணாக் கோத்து ௿
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்௿
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.6

636 ஆதியனை எறிமணியின் ஓசை யானை௿
அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க௿
சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்௿
சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட௿
வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை௿
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்௿
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.7

637 மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை௿
மறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்௿
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்௿
பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்௿
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை௿
ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே௿
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.8

638 நசையானை நால்வேதத் தப்பா லானை௿
நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை௿
இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை௿
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்௿
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்௿
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்௿
திசையானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.9

639 பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்௿
பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்௿
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்௿
தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே௿
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் ௿
ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே௿
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்௿
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
6.63.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.64 திருவேகம்பம் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


640 கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்௿
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்௿
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்௿
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை௿
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்௿
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்௿
ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.1

641 பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்௿
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்௿
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்௿
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த௿
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்௿
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா௿
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.2

642 நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்௿
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்௿
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்௿
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்௿
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்௿
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை௿
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.3

643 தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத் ௿
தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்௿
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்௿
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்௿
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத் ௿
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்௿
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.4

644 அடுத்தானை யுரித்தான் காண் ... ... ௿
... ... ... ...௿
௿
இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று.
6.64.5

645 அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்௿
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்௿
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் ௿
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்௿
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந் ௿
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க௿
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.6

646 அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி௿
அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்௿
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் ௿
பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்௿
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்௿
கடலில்விட முண்டமரர்க் கமுத மீய௿
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.7

647 முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் ௿
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்௿
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்௿
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி௿
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்௿
முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி௿
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.8

648 வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு ௿
வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்௿
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்௿
வானகமும் மண்ணகமு மற்று மாகிப்௿
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்௿
பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்௿
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.9

649 வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்௿
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி௿
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்௿
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்௿
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்௿
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற௿
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.10

650 அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட௿
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை௿
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்௿
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்௿
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து ௿
பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்௿
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.64.11
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.65 திருவேகம்பம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


651 உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க௿
ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்௿
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்௿
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே௿
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்௿
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்௿
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.1

652 நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் ௿
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்௿
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே ௿
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை௿
வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்௿
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்௿
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.2

653 பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் ௿
புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்௿
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்௿
வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்௿
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் ௿
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்௿
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.3

654 பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்௿
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற௿
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்௿
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்௿
பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும் ௿
பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த௿
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.4

655 பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்௿
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்௿
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்௿
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்௿
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் ௿
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த௿
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.5

656 ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்௿
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை௿
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்௿
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்௿
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர் ௿
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்௿
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.6

657 உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்௿
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்௿
இமய வடகயிலைச் செல்வன் றான்காண்௿
இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்௿
சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்௿
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய௿
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.7

658 தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்௿
தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்௿
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்௿
ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்௿
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்௿
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்௿
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.8

659 முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்௿
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்௿
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் ௿
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்௿
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் ௿
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்௿
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.9

660 பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்௿
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை௿
தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்௿
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்௿
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை ௿
எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்௿
இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி ௿
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
6.65.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.66 திருநாகேச்சரம் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


661 தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்௿
தலையவனை மலையவனை உலக மெல்லாம்௿
ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை௿
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா௿
மாயவனை மறையவனை மறையோர் தங்கள் ௿
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற௿
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.1

662 உரித்தானை மதவேழந் தன்னை மின்னார் ௿
ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்௿
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்௿
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்௿
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க் ௿
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்௿
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.2

663 காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்௿
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்௿
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனை௿
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத௿
ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை௿
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க௿
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.3

664 தலையானை எவ்வுலகுந் தானா னானைத்௿
தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா௿
நிலையானை நேசர்க்கு நேசன் றன்னை௿
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற௿
மலையானை வரியரவு நாணாக் கோத்து ௿
வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த௿
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.4

665 மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு௿
விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும்௿
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்௿
பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்௿
பையானைப் பையரவ மசைத்தான் றன்னைப்௿
பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்௿
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.5

666 துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்௿
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த௿
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி௿
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை௿
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை௿
அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்௿
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.6

667 மறையானை மால்விடையொன் றூர்தி யானை௿
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்௿
இறையானை என்பிறவித் துயர்தீர்ப் பானை௿
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்௿
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் ௿
என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த௿
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.7

668 எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்௿
இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்௿
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப் ௿
பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்௿
கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்௿
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்௿
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.8

669 அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை௿
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்௿
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச் ௿
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்௿
கெளியானை யாவர்க்கு மரியான் றன்னை௿
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற்௿
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.9

670 சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச் ௿
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்௿
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்௿
பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை௿
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச ௿
அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்௿
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்௿
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
6.66.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.67 திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


671 ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை௿
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க௿
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்௿
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த௿
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்௿
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த௿
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.1

672 சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்௿
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை௿
நற்பான்மை அறியாத நாயி னேனை௿
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்௿
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்௿
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்௿
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.2

673 அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை௿
ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்௿
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை௿
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்௿
குளைவானை அல்லாதார்க் குளையா தானை௿
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு௿
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.3

674 தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத் ௿
தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்௿
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்௿
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்௿
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை௿
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை௿
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.4

675 நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை௿
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்௿
சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத்௿
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னை௿
வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை௿
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க௿
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.5

676 சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை௿
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை௿
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ௿
ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை௿
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ௿
மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்௿
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.6

677 உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ௿
ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானை௿
விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் ௿
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை௿
வளரொளியை மரகதத்தி னுருவி னானை௿
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்௿
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.7

678 தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்௿
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை௿
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்௿
உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை௿
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க௿
வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி௿
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.8

679 மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை௿
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு௿
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்௿
போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை௿
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை௿
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்௿
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.9

680 முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் ௿
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்௿
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்௿
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது௿
பொறித்தானைப் புரமூன்று மெரிசெய் தானைப்௿
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்௿
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.67.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - கேடிலியப்பர்,௿ தேவியார் - வனமுலைநாயகியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.68 திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


681 கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்௿
கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்௿
குருமணையைக் கோளரவ மாட்டு வானைக்௿
கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை௿
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை௿
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க௿
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.1

682 காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்௿
காபாலி கட்டங்க மேந்தி னானைப்௿
பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்௿
பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்௿
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்௿
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்௿
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.2

683 எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை௿
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று௿
பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்௿
பாமாலை பாடப் பயில்வித் தானை௿
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை௿
முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச்௿
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.3

684 ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை௿
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்௿
கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்௿
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்௿
தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு ௿
தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த௿
தீன்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.4

685 தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்௿
தாமரையான் நான்முகனுந் தானே யாகி௿
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்௿
மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை௿
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்௿
கங்கங்கே அறுசமய மாகி நின்ற௿
திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.5

686 புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப்௿
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னை௿
விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை ௿
வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்௿
கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்௿
கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்௿
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.6

687 போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்௿
புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக்௿
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்௿
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை௿
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்௿
வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்௿
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.7

688 துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்௿
சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்௿
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்௿
பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை௿
மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர்௿
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற௿
திறலானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.8

689 பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்௿
புவலோக மெல்லா முழிதந் தானை௿
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை௿
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்௿
கற்றூணைக் காளத்தி மலையான் றன்னைக்௿
கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்௿
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.9

690 இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி௿
எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்௿
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் றன்னைப்௿
புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை௿
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து௿
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்௿
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்௿
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
6.68.10
௿
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. இதுவே விருத்தாசலம்.௿
சுவாமிபெயர் - பழமலைநாதர்,௿
தேவியார் - பெரியநாயகியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.69 திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


691 ஆராத இன்னமுதை அம்மான் றன்னை௿
அயனொடுமா லறியாத ஆதி யானைத்௿
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்௿
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை௿
நீரானைக் காற்றானைத் தீயா னானை௿
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த௿
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.1

692 விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை௿
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்௿
சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்௿
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை௿
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க௿
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்௿
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.2

693 பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்௿
புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை௿
வேதியனை வெண்காடு மேயான் றன்னை௿
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்௿
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை௿
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்௿
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.3

694 போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்௿
பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை௿
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை௿
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்௿
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்௿
சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே௿
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.4

695 அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்௿
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்௿
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்௿
கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே௿
தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்௿
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்௿
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.5

696 கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்௿
கனலாடு திருமேனி கமலத் தோன்றன்௿
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்௿
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்௿
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்௿
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்௿
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.6

697 நதியாருஞ் சடையானை நல்லூ ரானை௿
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை௿
மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை௿
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை௿
நிதியாளன் றோழனை நீடு ரானை௿
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்௿
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.7

698 நற்றவனை நான்மறைக ளாயி னானை௿
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்௿
செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்௿
திருவாரூர்த் திருமூலத் தான மேய௿
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்௿
குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்௿
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.8

699 ஊனவனை உடலவனை உயிரா னானை௿
உலகேழு மானானை உம்பர் கோவை௿
வானவனை மதிசூடும் வளவி யானை௿
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற௿
கானவனைக் கயிலாய மலையு ளானைக்௿
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே௿
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.9

700 தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்௿
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்௿
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி௿
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்௿
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்௿
குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று௿
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
6.69.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - முக்கோணவீசுவரர்,௿ தேவியார் - மைமேவுங்கண்ணியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.70 க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


701 தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி௿
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்௿
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்௿
வீரட்டங் கோகரணங் கோடி காவும்௿
முல்லைப் புறவம் முருகன் பூண்டி௿
முழையூர் பழையாறை சத்தி முற்றங்௿
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.1

702 ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்௿
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்௿
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்௿
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்௿
கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்௿
கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்௿
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.2

703 இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்௿
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்௿
சடைமுடி சாலைக் குடிதக் களூர்௿
தலையாலங் காடு தலைச்சங் காடு௿
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்௿
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு௿
கடைமுடி கானூர் கடம்பந் துறை௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.3

704 எச்சில் இளமர் ஏம நல்லூர்௿
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி௿
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்௿
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்௿
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்௿
கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி௿
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.4

705 கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்௿
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்௿
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்௿
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்௿
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்௿
எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்௿
கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.5

706 மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்௿
வக்கரை மந்தாரம் வார ணாசி௿
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி௿
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்௿
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்௿
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்௿
கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.6

707 வீழி மிழலைவெண் காடு வேங்கூர்௿
வேதி குடிவிசய மங்கை வியலூர்௿
ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை௿
ஆலங் காடும் அரைதைப் பெரும்௿
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்௿
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்௿
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.7

708 உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்௿
உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்௿
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்௿
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்௿
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா௿
வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்௿
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.8

709 திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி௿
தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை௿
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்௿
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு௿
அண்டர் தொழுமதிகை வீரட் டானம்௿
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்௿
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.9

710 நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு௿
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல௿
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை௿
தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்௿
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்௿
ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்௿
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.10

711 புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்௿
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்௿
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்௿
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி௿
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்௿
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்௿
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற௿
கயிலாய நாதனையே காண லாமே.
6.70.11
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.71 திருஅடைவு - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


712 பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து௿
புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்௿
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்௿
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்௿
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி௿
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்௿
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்௿
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.
6.71.1

713 காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்௿
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை௿
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்௿
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங்௿
கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்௿
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி௿
நாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்௿
நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே.
6.71.2

714 நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்௿
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி௿
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி௿
கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்௿
விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி௿
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி௿
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி௿
புதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே.
6.71.3

715 பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்௿
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்௿
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்௿
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்௿
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்௿
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்௿
துறையூருந் துவையூருந் தோழுர் தானுந்௿
துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே.
6.71.4

716 பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்௿
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்௿
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்௿
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்௿
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்௿
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்௿
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து௿
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே.
6.71.5

717 மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்௿
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு௿
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்௿
சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு௿
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு௿
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க௿
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை௿
வெண்காடும் அடையவினை வேறா மன்றே.
6.71.6

718 கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்௿
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்௿
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்௿
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்௿
மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்௿
மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு௿
குடவாயில் குணவாயி லான வெல்லாம்௿
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.
6.71.7

719 நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்௿
சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான௿
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்௿
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்௿
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம்௿
அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்௿
ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்தி௿
இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.
6.71.8

720 கந்தமா தனங்கயிலை மலை கேதாரங்௿
காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா௿
மந்தமாம் பொழிற்சாரல் வடபர்ப் பதம்௿
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்௿
விந்தமா மலைவேதஞ் சைய மிக்க௿
வியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம்௿
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்௿
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.
6.71.9

721 நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு௿
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்௿
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்௿
இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்௿
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா௿
கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா௿
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்௿
குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே.
6.71.10

722 கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு௿
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்௿
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை௿
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்௿
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை௿
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு௿
மயிலாடு துறைகடம்பந் துறையா வடு௿
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.
6.71.11
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.72 திருவலஞ்சுழி - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


723 அலையார் புனற்கங்கை நங்கை காண௿
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்௿
தொலையாத வென்றியார் நின்றி யூரும்௿
நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு௿
இலையார் படைகையி லேந்தி யெங்கும்௿
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த௿
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த௿
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.
6.72.1
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.73 திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்


திருச்சிற்றம்பலம்


724 கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்௿
கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்௿
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்௿
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்௿
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்௿
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.1

725 கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்௿
கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்௿
அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்௿
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்௿
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி௿
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.
6.73.2

726 செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்௿
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்௿
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்௿
பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்௿
மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி௿
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்௿
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.3

727 பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்௿
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்௿
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்௿
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்௿
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்௿
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்௿
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.
6.73.4

728 அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்௿
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்௿
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்௿
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்௿
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி௿
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்௿
கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.5

729 சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்௿
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்௿
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்௿
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்௿
மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்௿
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.6

730 அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்௿
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்௿
பணமணிமா நாக முடையான் கண்டாய்௿
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்௿
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்௿
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.7

731 விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்௿
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்௿
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்௿
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்௿
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்௿
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.8

732 தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்௿
தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்௿
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்௿
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்௿
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿
மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்௿
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.9

733 விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்௿
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்௿
தண்டா மரையானும் மாலுந் தேடத்௿
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்௿
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்௿
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்௿
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்௿
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
6.73.10
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன.௿
திருவலஞ்சுழியில்,௿
சுவாமிபெயர் - கபர்த்தீசுவரர்,௿ தேவியார் - பெரியநாயகியம்மை.௿
திருக்கொட்டையூரில்,௿
சுவாமிபெயர் - சுந்தரகோடீசுவரர்,௿ தேவியார் - பந்தாடுநாயகியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.74 திருநாரையூர் - திருத்தாண்டகம்௿ ௿

திருச்சிற்றம்பலம்


734 சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்௿
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை௿
அல்லானைப் பகலானை அரியான் றன்னை௿
அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த௿
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை௿
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்௿
நல்லானைத் தீயாடு நம்பன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.1

735 பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்௿
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை௿
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்௿
மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை௿
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை௿
நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்௿
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.2

736 மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை௿
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்௿
தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத்௿
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை௿
ஆவாத அடலேறொன் றுடையான் றன்னை௿
அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற௿
நாவானை நாவினில்நல் லுரையா னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.3

737 செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச்௿
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை௿
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி௿
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற௿
கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்௿
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்௿
நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.4

738 புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்௿
புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை௿
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை௿
வெண்ணீறு செம்மேனி விரவி னானை௿
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை௿
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை௿
நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.5

739 பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்௿
பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை௿
மறவாத மனத்தகத்து மன்னி னானை௿
மலையானைக் கடலானை வனத்து ளானை௿
உறவானைப் பகையானை உயிரா னானை௿
உள்ளானைப் புறத்தானை ஓசை யானை௿
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.6

740 தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்௿
தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்௿
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்௿
கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை௿
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை௿
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை௿
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.7

741 அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை௿
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா௿
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை௿
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்௿
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்௿
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை௿
நரிவிரவு காட்டகத்தி லாட லானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.8

742 ஆலால மிடற்றணியா அடக்கி னானை௿
ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்௿
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்௿
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை௿
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி௿
வேள்வியினின் பயனாய விமலன் றன்னை௿
நாலாய மறைக்கிறைவ னாயி னானை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.9

743 மீளாத ஆளென்னை உடையான் றன்னை௿
வெளிசெய்த வழிபாடு மேவி னானை௿
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து௿
வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்௿
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்௿
தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே௿
நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை௿
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
6.74.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.75 திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


744 சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்௿
சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்௿
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்௿
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்௿
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்௿
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்௿
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.1

745 கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்௿
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்௿
ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்௿
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்௿
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்௿
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்௿
கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.2

746 நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்௿
நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை௿
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்௿
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்௿
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்௿
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்௿
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.3

747 தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்௿
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்௿
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி௿
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்௿
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி௿
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்௿
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.4

748 காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்௿
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்௿
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்௿
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்௿
நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்௿
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்௿
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.5

749 முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்௿
முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்௿
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி௿
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்௿
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு௿
சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்௿
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.6

750 காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்௿
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்௿
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்௿
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்௿
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்௿
பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்௿
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.7

751 பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்௿
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு௿
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்௿
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல௿
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து௿
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்௿
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.8

752 பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்௿
பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்௿
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்௿
சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்௿
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை௿
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே௿
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.9

753 ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை௿
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே௿
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்௿
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்௿
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை௿
சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்௿
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.10

754 செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்௿
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்௿
நெறிகொண்ட குழலியுமை பாக மாக௿
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்௿
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்௿
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்௿
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
6.75.11
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - மடந்தைபாகேசுவரர்,௿
தேவியார் - பெரியநாயகியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.76 திருப்புத்தூர் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


755 புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்௿
போர்விடையின் பாகன்காண் புவன மேழும்௿
விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்௿
விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந்௿
தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோ ன்காண்௿
தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண்௿
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.1

756 வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்௿
மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்௿
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்௿
குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட௿
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்௿
கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்௿
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.2

757 மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்௿
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்௿
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி௿
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்௿
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற௿
புனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டு௿
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.3

758 ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்௿
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்௿
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்௿
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்௿
மாடேறி முத்தீனுங் கானல் வேலி௿
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி௿
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.4

759 கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்௿
காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்௿
பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்௿
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண்௿
தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன்௿
சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண்௿
திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.5

760 காம்பாடு தோளுமையாள் காண நட்டங்௿
கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய௿
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வான்காண்௿
பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண்௿
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட௿
சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்௿
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.6

761 வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்௿
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்௿
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு௿
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்௿
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்௿
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்௿
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.7

762 புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்த௿
புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச௿
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்௿
வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண்௿
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை௿
ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்௿
திக்கணைந்து வருமருங்கில் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.8

763 பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்௿
பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற௿
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று௿
ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட௿
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்௿
பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்௿
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.9

764 உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட௿
ஓராழி படைத்தவன்காண் உலகு சூழும்௿
வரமதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்௿
வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்௿
அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா௿
அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்௿
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்௿
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
6.76.10
௿
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - புத்தூரீசர்,௿ தேவியார் - சிவகாமியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.77 திருவாய்மூர் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


765 பாட வடியார் பரவக் கண்டேன்௿
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்௿
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்௿
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்௿
கோட லரவார் சடையிற் கண்டேன்௿
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்௿
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.1

766 பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்௿
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்௿
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்௿
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்௿
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்௿
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்௿
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.2

767 மண்ணைத் திகழ நடம தாடும்௿
வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்௿
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்௿
வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்௿
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்௿
நாலு மறையங்க மோதக் கண்டேன்௿
வண்ணப் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.3

768 விளைத்த பெரும்பத்தி கூர நின்று௿
மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்௿
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்௿
என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்௿
திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்௿
சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று௿
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.4

769 கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்௿
காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்௿
டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்௿
உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்௿
நான்மறை யானோடு நெடிய மாலும்௿
நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக௿
மான்மறி தங்கையின் மருவக் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.5

770 அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்௿
அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்௿
முடியார் சடைமேல் அரவ மூழ்க௿
மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்௿
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்௿
கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்௿
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.6

771 குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்௿
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்௿
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்௿
ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்௿
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்௿
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்௿
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.7

772 பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்௿
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்௿
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்௿
பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன்௿
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்௿
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்௿
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.8

773 மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்௿
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்௿
கையம் பரனெரித்த காட்சி கண்டேன்௿
கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்௿
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்௿
அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து௿
வையம் பரவ இருத்தல் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.9

774 கலங்க இருவர்க் கழலாய் நீண்ட௿
காரணமுங் கண்டேன் கருவாய் நின்று௿
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்௿
பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்௿
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்௿
இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்௿
வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்௿
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
6.77.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.78 திருவாலங்காடு - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


775 ஒன்றா வுலகனைத்து மானார் தாமே௿
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே௿
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே௿
நீர்வளிதீ யாகாச மானார் தாமே௿
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே௿
கோலப் பழனை யுடையார் தாமே௿
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.1

776 மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே௿
வானோர் வணங்கப் படுவார் தாமே௿
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே௿
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே௿
பலபலவும் வேடங்க ளானார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.2

777 ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே௿
அளவில் பெருமை யுடையார் தாமே௿
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே௿
புனிதப் பொருளாகி நின்றார் தாமே௿
பாவுற்ற பாட லுகப்பார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தேவுற் றடிபரவ நின்றார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.3

778 நாறுபூங் கொன்றை முடியார் தாமே௿
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே௿
மாறிலா மேனி யுடையார் தாமே௿
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே௿
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தேறினார் சித்தத் திருந்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.4

779 அல்லும் பகலுமாய் நின்றார் தாமே௿
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே௿
சொல்லும் பொருளெலா மானார் தாமே௿
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே௿
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.5

780 தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே௿
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே௿
தண்டா மரையானும் மாலுந் தேடத்௿
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே௿
பண்டா னிசைபாட நின்றார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.6

781 மையாருங் கண்ட மிடற்றார் தாமே௿
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே௿
ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்௿
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே௿
பையா டரவ மசைத்தார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
செய்யாள் வழிபட நின்றார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.7

782 விண்முழுதும் மண்முழுது மானார் தாமே௿
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே௿
கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே௿
காலங்க ளூழி கடந்தார் தாமே௿
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
திண்மழுவா ளேந்து கரத்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.8

783 காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே௿
கயிலை மலையை யுடையார் தாமே௿
ஊரா வேகம்பம் உகந்தார் தாமே௿
ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே௿
பாரார் புகழப் படுவார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.9

784 மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே௿
வண்கயிலை மாமலையை வந்தி யாத௿
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை௿
நெரிய விரலா லடர்த்தார் தாமே௿
பாலொத்த மேனி நிறத்தார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
6.78.10
௿
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,௿
தேவியார் - வண்டார்குழலியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.79 திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


785 தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்௿
சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை௿
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை௿
ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை௿
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை௿
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற௿
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.1


786 அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை௿
அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்௿
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்௿
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை௿
புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்௿
புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்௿
தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.2


787 மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை௿
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை௿
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை௿
இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்௿
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்௿
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற௿
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.3


788 சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்௿
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்௿
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்௿
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்௿
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்௿
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற௿
தவனாய தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.4


789 கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்௿
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை௿
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை௿
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்௿
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்௿
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்௿
சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.5


790 விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை௿
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை௿
அடைந்தவரை அமருலக மாள்விப் பானை௿
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை௿
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்௿
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த௿
தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.6


791 விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை௿
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை௿
முடைநாறு முதுகாட்டி லாட லானை௿
முன்னானைப் பின்னானை அந்நா ளானை௿
உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை௿
உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்௿
சடையானைத் தலையாலங் காடன் றன்னை௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.7


792 கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்௿
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை௿
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை௿
என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்௿
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்௿
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்௿
தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.8


793 பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்௿
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்௿
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக்௿
காரணனை நாரணனைக் கமலத் தோனை௿
எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற௿
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்௿
தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.9


794 கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்௿
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி௿
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி௿
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்௿
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்௿
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம௿
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்௿
சாராதே சாலநாள் போக்கி னேனே.
6.79.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - ஆடவல்லவீசுவரர்,௿ தேவியார் - திருமடந்தையம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.80 திருமாற்பேறு - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


795 பாரானைப் பாரினது பயனா னானைப்௿
படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை௿
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்௿
கனைத்துலகு மானானை அமரர் கோனைக்௿
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்௿
கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற௿
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.1


796 விளைக்கின்ற நீராகி வித்து மாகி௿
விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்௿
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்௿
தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்௿
முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றி௿
முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்௿
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.2


797 மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை௿
மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்௿
கலைநிலவு கையானைக் கம்பன் றன்னைக்௿
காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை௿
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை௿
மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்௿
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.3


798 உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை௿
ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்௿
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்௿
பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே௿
கற்றானைக் கற்பனவுந் தானே யாய௿
கச்சியே கம்பனைக் காலன் வீழச்௿
செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.4


799 நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி௿
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை௿
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்௿
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்௿
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த௿
அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்௿
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.5


800 மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை௿
மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை௿
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை௿
உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்௿
கருநிலவு கண்டனைக் காளத் தியைக்௿
கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்௿
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.6


801 பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்௿
பெரியானை அரியானைப் பெண்ணா ணாய௿
நிறத்தானை நின்மலனை நினையா தாரை௿
நினையானை நினைவோரை நினைவோன் றன்னை௿
அறத்தானை அறவோனை ஐயன் றன்னை௿
அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்௿
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.7


802 வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை௿
வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை௿
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை௿
ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்௿
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்௿
கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்௿
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.8


803 முற்றாத முழுமுதலை முளையை மொட்டை௿
முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்௿
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப்௿
பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்௿
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்௿
ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்௿
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் ௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.9


804 விரித்தானை நான்மறையோ டங்க மாறும்௿
வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி௿
நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை௿
நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை௿
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்௿
தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்௿
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்௿
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
6.80.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.81 திருக்கோடிகா - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


805 கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்௿
கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்௿
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் ௿
மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்௿
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்௿
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்௿
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.1


806 வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்௿
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்௿
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்௿
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்௿
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்௿
திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய்௿
கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.2


807 அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்௿
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்௿
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்௿
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்௿
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்௿
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்௿
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.3


808 மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்௿
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்௿
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்௿
பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்௿
அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்௿
ஐயா றகலாத ஐயன் கண்டாய்௿
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.4


809 வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்௿
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்௿
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்௿
புகலூரை யகலாத புனிதன் கண்டாய்௿
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்௿
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்௿
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.5


810 கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்௿
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்௿
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்௿
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்௿
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்௿
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்௿
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.6


811 உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்௿
ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்௿
கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய்௿
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்௿
இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய்௿
என்னெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்௿
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.7


812 படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்௿
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்௿
நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய்௿
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்௿
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்௿
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்௿
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்௿
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
6.81.8


இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
6.81.9-10
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.82 திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


813 வானத் திளமதியும் பாம்புந் தன்னில்௿
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்௿
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்௿
தில்லை நடமாடுந் தேவர் போலும்௿
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்௿
நன்மையுந் தீமையு மானார் போலுந்௿
தேனொத் தடியார்க் கினியார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.1


814 விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்௿
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்௿
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்௿
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்௿
பண்ணார் களிவண்டு பாடி யாடும்௿
பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்௿
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.2


815 கானிரிய வேழ முரித்தார் போலுங்௿
காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்௿
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்௿
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்௿
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்௿
உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்௿
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.3


816 ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்௿
ஊழி பலகண் டிருந்தார் போலும்௿
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்௿
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங்௿
கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்௿
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்௿
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் ௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.4


817 கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங்௿
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்௿
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்௿
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்௿
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்௿
ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்௿
சீர்மல்கு பாட லுகந்தார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.5


818 மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய௿
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்௿
மூவாத மேனி முதல்வர் போலும்௿
முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்௿
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்௿
குரைகழலா லன்று குமைத்தார் போலுந்௿
தேவாதி தேவர்க் கரியார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.6


819 கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்௿
காரோணத் தென்று மிருப்பார் போலும்௿
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்௿
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்௿
படியொருவ ரில்லாப் படியார் போலும்௿
பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ்௿
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.7


820 விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்௿
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்௿
மலையினார் மங்கை மணாளர் போலும்௿
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்௿
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ்௿
சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்௿
சிலையினார் செங்க ணரவர் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.8


821 அல்ல லடியார்க் கறுப்பார் போலும்௿
அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்௿
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்௿
நள்ளாறு நாளும் பிரியார் போலும்௿
முல்லை முகைநகையாள் பாகர் போலும்௿
முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்௿
தில்லை நடமாடுந் தேவர் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.9


822 உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால்௿
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச௿
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்௿
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்௿
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்௿
பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்௿
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந்௿
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
6.82.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர்,௿
தேவியார் - குயிலினும்நன்மொழியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.83 திருப்பாசூர் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


823 விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி௿
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற௿
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி௿
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற௿
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்௿
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற௿
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.1


824 வேதமோர் நான்காயா றங்க மாகி௿
விரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்௿
கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்௿
குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்௿
காதலால் வானவர்கள் போற்றி யென்று௿
கடிமலர்க ளவைதூவி ஏத்த நின்ற௿
பாதியோர் மாதினனைப் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.2


825 தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்௿
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்௿
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்௿
காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்௿
குடமுழவச் சதிவழியே அனல்கை யேந்திக்௿
கூத்தாட வல்ல குழக னாகிப்௿
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.3


826 நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை௿
நிறைமதிய முடன்சூடி நீதி யாலே௿
சீராரும் மறையோதி உலக முய்யச்௿
செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட௿
காராருங் கண்டனைக் கச்சி மேய௿
கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்௿
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.4


827 வேடனாய் விசயன்றன் வியப்பைக் காண்பான்௿
விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்௿
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்௿
கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப் பூசல்௿
ஆடினார் பெருங்கூத்துக் காளி காண௿
அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு௿
பாடினார் நால்வேதம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.5


828 புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற்௿
பொதுப்பந்தர் அதுவிழைத்துச் சருகால் மேய்ந்த௿
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்௿
சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க௿
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு௿
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்௿
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.6


829 இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்௿
இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்௿
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்௿
அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்௿
தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்௿
தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்த௿
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.7


830 அண்டவர்கள் கடல்கடைய அதனுட் டோ ன்றி௿
அதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்௿
எண்டிசையுஞ் சுடுகின்ற ஆற்றைக் கண்டும்௿
இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்௿
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று௿
வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்௿
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.8


831 ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை௿
நான்முகனு மறியாத நெறியான் கையிற்௿
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்௿
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்௿
காலத்தா லுதைசெய்து காதல் செய்த௿
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்௿
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.9


832 வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்௿
மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோ டிச்௿
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்௿
தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி௿
ஏந்துதிரள் திண்டோ ளுந் தலைகள் பத்தும் ௿
இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்ட௿
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய௿
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
6.83.1
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.84 திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


833 பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்௿
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி௿
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்௿
எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி௿
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை௿
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்௿
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.1


834 துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்௿
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட௿
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்௿
ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து௿
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை௿
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற௿
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.2


835 உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை௿
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற௿
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்௿
பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்௿
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்௿
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த௿
திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.3


836 கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்௿
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்௿
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்௿
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்௿
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே௿
பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்௿
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.4


837 நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை௿
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக௿
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை௿
வியன்கெடில வீரட்டம் மேவி னானை௿
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி௿
மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்௿
செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.5


838 கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்௿
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்௿
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்௿
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்௿
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்௿
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று௿
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.6


839 எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை௿
ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்௿
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்௿
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்௿
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்௿
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்௿
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.7


840 கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்௿
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்௿
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்௿
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை௿
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க௿
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்௿
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.8


841 அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை௿
அலைகடலில் ஆலால மமுது செய்த௿
கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்௿
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை௿
உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்௿
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்௿
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.9


842 போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்௿
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை௿
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்௿
நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்௿
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்௿
பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற௿
சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்௿
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.1
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - கணபதீசுவரர்,௿ தேவியார் - திருக்குழல்மாதம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.85 திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


843 ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா௿
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்௿
போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண்௿
புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்௿
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்௿
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே௿
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.1


844 கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக்௿
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி௿
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்௿
ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்ற௿
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்௿
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற௿
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.2


845 நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்௿
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்௿
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்௿
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்௿
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்௿
அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்௿
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.3


846 மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்௿
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்௿
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்௿
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்௿
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்௿
ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத்௿
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.4


847 கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்௿
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்௿
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்௿
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்௿
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்௿
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்௿
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.5


848 உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்௿
ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண்௿
புற்றரவே ஆடையுமாய்ப் பூணு மாகிப்௿
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்௿
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக௿
நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினாற்௿
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.6


849 உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி௿
உருண்டோ டத் தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந்௿
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற௿
தலையவன்காண் மலைமகளாம் உமையைச் சால௿
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி௿
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்௿
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.7


850 உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடி௿
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்௿
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்௿
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை௿
நிரந்துவரும் இருகரையுந் தடவா வோடி௿
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்௿
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.8


இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6.85.9


851 அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்௿
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்௿
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி௿
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்௿
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்௿
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்௿
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய௿
சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
6.85.1
௿
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - முண்டீசுவரர்,௿ தேவியார் - கானார்குழலியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.86 திருவாலம்பொழில் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


852 கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்௿
கமலத்தோன் றலையரிந்த கபா லியை௿
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை௿
உணர்வெலா மானானை ஓசை யாகி௿
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை௿
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய௿
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.1


853 உரித்தானைக் களிறதன் றோல் போர்வை யாக௿
உடையானை உடைபுலியி னதளே யாகத்௿
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்௿
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்௿
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்௿
பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச்௿
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.2


854 உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை௿
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற்௿
கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக்௿
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்௿
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை௿
அள்ளூறி எம்பெருமா னென்பார்க் கென்றுந்௿
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.3


855 பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்௿
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்௿
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் றன்னை௿
வாட்போக்கி யம்மானை எம்மா னென்று௿
வாரமதா மடியார்க்கு வார மாகி௿
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்௿
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.4


856 வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னை௿
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை௿
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த௿
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்௿
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப்௿
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்௿
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.5


857 விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை௿
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை௿
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா௿
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்௿
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்௿
பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு௿
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே.
6.86.6


858 பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்௿
புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை௿
எல்லாருந் தன்னையே இகழ அந்நாள்௿
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்௿
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்௿
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்௿
செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத்௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.7


859 ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ௿
டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப்௿
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்௿
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப்௿
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்௿
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்௿
சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.8


860 கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங்௿
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்௿
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்௿
பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்௿
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்௿
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த௿
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய௿
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
6.86.9


இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று.
6.86.1
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - ஆத்மநாதீசுவரர்,௿ தேவியார் - ஞானாம்பிகையம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.87 திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


861 வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்௿
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்௿
ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்௿
ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்௿
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்௿
கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்௿
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.1


862 நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த௿
நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்௿
சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்௿
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்௿
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்௿
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற௿
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.2


863 வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்௿
மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்௿
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்௿
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்௿
அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்௿
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்௿
செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.3


864 பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿
பீடழியச் சாடி யருள்கள் செய்த௿
முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்௿
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க௿
அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்௿
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட௿
சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.4


865 தூயவன்காண் நீறு துதைந்த மேனி௿
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்௿
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்௿
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்௿
ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்௿
அடியார்கட் காரமுத மாயி னான்காண்௿
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.5


866 பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்௿
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற௿
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்௿
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்௿
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி௿
பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்௿
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.6


867 வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்௿
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்௿
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்௿
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க௿
கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்௿
காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்௿
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.7


இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் மறைந்து போயின.
6.87.8-9


868 கலையாரு நூலங்க மாயி னான்காண்௿
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி௿
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற௿
மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்௿
தலையாய மலையெடுத்த தகவி லோனைத்௿
தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட௿
சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்௿
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
6.87.1
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர்,௿ தேவியார் - பெரியநாயகியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.88 திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


869 ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை௿
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்௿
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை௿
எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை௿
ஊராரும் படநாக மாட்டு வானை௿
உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்௿
சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.1


870 ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா௿
அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்௿
சோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்௿
சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை௿
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்௿
உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்௿
தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.2


871 வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை௿
வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்௿
தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்௿
சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்௿
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி௿
உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்௿
திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.3


872 அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ௿
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை௿
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ௿
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை௿
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்௿
உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்௿
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.4


873 பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்௿
பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்௿
பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்௿
பாராத வகைபண்ண வல்லான் றன்னை௿
ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்௿
உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்௿
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.5


874 அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை௿
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்௿
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை௿
மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்௿
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்௿
பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்௿
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.6


875 மலையானை வருமலையன் றுரிசெய் தானை௿
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்௿
கலையானைக் கலையாருங் கையி னானைக்௿
கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்௿
உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்௿
புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த௿
சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.7


876 சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்௿
செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்௿
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்௿
தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்௿
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்௿
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்௿
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.8


877 வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று௿
மலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்௿
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே௿
இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்௿
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்௿
பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்௿
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்௿
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
6.88.9


இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று.
6.88.1
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - துயர்தீர்த்தசெல்வர்,௿ தேவியார் - பூங்கொடியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.89 திருவின்னம்பர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


878 அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும்௿
அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்௿
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்௿
தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்௿
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்௿
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்௿
எல்லி நடமாட வல்லார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.1


879 கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்௿
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்௿
ஊழி முதல்வருந் தாமே போலும்௿
உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்௿
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்௿
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்௿
ஏழு பிறவிக்குந் தாமே போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.2


880 தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்௿
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்௿
பண்டிருவர் காணாப் படியார் போலும்௿
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்௿
கண்ட மிறையே கறுத்தார் போலுங்௿
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்௿
இண்டைச் சடைசேர் முடியார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.3


881 வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை௿
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்௿
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்௿
ஒளிநீறு பூசு மொருவர் போலுந்௿
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந்௿
தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்௿
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.4


882 சூழுந் துயர மறுப்பார் போலுந்௿
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்௿
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்௿
ஆட லுகந்த அழகர் போலுந்௿
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு௿
தன்மை யளித்த தலைவர் போலும்௿
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.5


883 பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்௿
பாரூர் விடையொன் றுடையார் போலும்௿
பூதப் படையாள் புனிதர் போலும்௿
பூம்புகலூர் மேய புராணர் போலும்௿
வேதப் பொருளாய் விளைவார் போலும்௿
வேடம் பரவித் திரியுந் தொண்டர்௿
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.6


884 பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்௿
பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்௿
கல்லாதார் காட்சிக் கரியார் போலுங்௿
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்௿
பொல்லாத பூதப் படையார் போலும்௿
பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்௿
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.7


885 மட்டு மலியுஞ் சடையார் போலும்௿
மாதையோர் பாக முடையார் போலுங்௿
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்௿
காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்௿
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்௿
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்௿
எட்டுத் திசைகளுந் தாமே போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.8


886 கருவுற்ற காலத்தே என்னை யாண்டு௿
கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்௿
செருவிற் புரமூன்று மட்டார் போலுந்௿
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்௿
மருவிப் பிரியாத மைந்தர் போலும்௿
மலரடிகள் நாடி வணங்க லுற்ற௿
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.9


887 அலங்கற் சடைதாழ ஐய மேற்று௿
அரவ மரையார்க்க வல்லார் போலும்௿
வலங்கை மழுவொன் றுடையார் போலும்௿
வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்௿
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை௿
விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்௿
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்௿
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.89.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்,௿
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.90 திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


888 மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை௿
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை௿
நாவலனை நரைவிடையொன் றேறு வானை௿
நால்வேத மாறங்க மாயி னானை௿
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை௿
அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்௿
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.1


889 தலையேந்து கையானை என்பார்த் தானைச்௿
சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்௿
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்௿
கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை௿
மலையானை மற்றொப்பா ரில்லா தானை௿
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்௿
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.2


890 தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச்௿
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்௿
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்௿
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்௿
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்௿
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட௿
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.3


891 விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை௿
மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்௿
பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப்௿
பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை௿
எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்௿
இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங்௿
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.4


892 உருத்திரனை உமாபதியை உலகா னானை௿
உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்௿
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்௿
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற௿
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை௿
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்௿
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.5


893 ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை௿
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்௿
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்௿
செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்௿
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்௿
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்௿
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.6


894 நாரணனும் நான்முகனு மறியா தானை௿
நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்௿
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்௿
பால்வணனைத் தீவணனைப் பகலா னானை௿
வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை௿
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்௿
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.7


895 வானவனை வலிவலமும் மறைக்காட் டானை௿
மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை௿
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்௿
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்௿
தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத்௿
தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்௿
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.8


896 நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானை௿
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்௿
தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச்௿
சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை௿
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை௿
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்௿
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.9


897 மடலாழித் தாமரையா யிரத்தி லொன்று௿
மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்௿
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்௿
தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட௿
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை௿
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்௿
கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
6.90.10
௿
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,௿ தேவியார் - கற்பகநாயகியம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.91 திருவெறும்பியூர் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


898 பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்௿
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய௿
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்௿
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி௿
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்௿
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட௿
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.1


899 பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்௿
பசுபதியைப் பாசுபத வேடத் தானை௿
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை௿
வேதியனை விண்ணவனை மேவி வையம்௿
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்௿
அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்௿
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.2


900 கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்௿
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்௿
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி௿
உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற௿
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த௿
மயானத்து மாசிலா மணியை வாசத்௿
திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.3


901 பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்௿
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்௿
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்௿
புண்ணியனைப் புவனியது முழுதும் போக௿
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை௿
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்௿
திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.4


902 பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்௿
பயில்வானை அயில்வாய சூல மேந்தி௿
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை௿
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்௿
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்௿
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்௿
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.5


903 கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்௿
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி௿
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக௿
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு௿
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு௿
மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்௿
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.6


904 நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை௿
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்௿
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்௿
மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்௿
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்௿
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்௿
சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.7


905 அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை௿
ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்௿
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா௿
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்௿
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்௿
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு௿
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.8


906 அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி௿
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்௿
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட௿
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட௿
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்௿
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்௿
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.9


907 அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி௿
அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள்௿
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று௿
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட௿
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை௿
எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த௿
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்௿
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.91.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.92 திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்


908 மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை௿
முதுபிணக்கா டுடையானை முதலா னானை௿
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை௿
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்௿
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்௿
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்௿
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.92.1


909 பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்௿
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்௿
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்௿
சுடருருவில் என்பறாக் கோலத் தானை௿
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை௿
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்௿
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்௿
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.92.2


இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர ௿
ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின.
6.92.3-10
௿
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.௿
சுவாமிபெயர் - வேதகிரீசுவரர்,௿
தேவியார் - பெண்ணினல்லாளம்மை.௿
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.93 பலவகைத் - திருத்தாண்டகம்
௿

திருச்சிற்றம்பலம்


910 நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு௿
நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு௿
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு௿
படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்௿
தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்௿
தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்௿
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகிற்௿
பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே.
6.93.1


911 ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே௿
அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை௿
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு௿
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்௿
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்௿
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய௿
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில்௿
நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே.
6.93.2


912 பொய்யாறா வாறே புனைந்து பேசிப்௿
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்௿
கையாறாக் கரண முடையோ மென்று௿
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்௿
நெய்யாறா ஆடிய நீல கண்டர்௿
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய௿
ஐயாறே ஐயாறே என்பீ ராகில்௿
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.
6.93.3


913 இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்௿
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்௿
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்௿
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்௿
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்௿
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய௿
பழனம் பழனமே என்பீ ராகிற்௿
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.
6.93.4


914 ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்௿
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்௿
மாற்றுத் துறைவழிகொண் டோ டா முன்னம்௿
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்௿
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்௿
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய௿
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீ ராகிற்௿
துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே.
6.93.5


915 கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்௿
கள்ளக் கடலி லழுந்தி வாளா௿
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்௿
நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்௿
அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேய௿
அருமறையோ டாறங்க மானார் கோயில்௿
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்௿
வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.
6.93.6


916 தண்டி குண்டோ தரன்பிங் கிருடி௿
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்௿
பண்டை உலகம் படைத்தான் றானும்௿
பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்௿
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்௿
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்௿
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்௿
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.
6.93.7


917 விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே௿
வெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது௿
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று௿
மாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர்௿
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்௿
பங்கயத்து மேலயனும் பரவிக் காணா௿
குடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற்௿
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.
6.93.8


918 தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்௿
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்௿
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்௿
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண௿
எண்காட்டாக் காடங் கிடமா நின்று௿
எரிவீசி இரவாடும் இறைவர் மேய௿
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்௿
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.
6.93.9


919 தந்தையார் தாயா ருடன் பிறந்தார்௿
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே௿
வந்தவா றெங்ஙனே போமா றேதோ௿
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா௿
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்௿
திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி௿
எந்தையார் திருநாமம் நமச்சி வாய௿
என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.
6.93.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.94 நின்ற - திருத்தாண்டகம்௿


திருச்சிற்றம்பலம்


920 இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி௿
இயமான னாயெறியுங் காற்று மாகி௿
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி௿
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்௿
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்௿
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி௿
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி௿
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
6.94.1


921 மண்ணாகி விண்ணாகி மலையு மாகி௿
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்௿
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்௿
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்௿
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்௿
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி௿
எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி௿
எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
6.94.2


922 கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்௿
காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப்௿
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்௿
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்௿
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்௿
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி௿
நெல்லாகி நிலனாகி நீரு மாகி௿
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.94.3


923 காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்௿
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்௿
கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்௿
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்௿
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி௿
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி௿
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.4


924 தீயாகி நீராகித் திண்மை யாகித்௿
திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்௿
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்௿
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்௿
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற௿
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி௿
நீயாகி நானாகி நேர்மை யாகி௿
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.94.5


925 அங்கமா யாதியாய் வேத மாகி௿
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்௿
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்௿
பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்௿
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்௿
கடலாகி மலையாகிக் கழியு மாகி௿
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.6


926 மாதா பிதாவாகி மக்க ளாகி௿
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்௿
கோதா விரியாய்க் குமரி யாகிக்௿
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்௿
போதாய மலர்கொண்டு போற்றி நின்று௿
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி௿
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி௿
அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
6.94.7


927 ஆவாகி ஆவினில் ஐந்து மாகி௿
அறிவாகி அழலாகி அவியு மாகி௿
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி௿
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்௿
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்௿
பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்௿
தேவாகித் தேவர் முதலு மாகிச்௿
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.94.8


928 நீராகி நீளகலந் தானே யாகி௿
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்௿
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்௿
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி௿
ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம்௿
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்௿
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்௿
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.94.9


929 மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்௿
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்௿
பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்௿
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்௿
பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப்௿
பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி௿
ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய்௿
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.95 தனி - திருத்தாண்டகம்௿
௿

திருச்சிற்றம்பலம்


930 அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ௿
அன்புடைய மாமனும் மாமி யும்நீ௿
ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ௿
ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ௿
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ௿
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ௿
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ௿
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
6.95.1


931 வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்௿
வெய்ய வினைப்பகையும் பைய நையும்௿
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்௿
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்௿
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி௿
அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த௿
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்௿
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.
6.95.2


932 ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே௿
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே௿
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே௿
உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே௿
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே௿
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே௿
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே௿
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
6.95.3


933 நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி௿
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற௿
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற௿
சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை௿
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்௿
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற௿
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்௿
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.
6.95.4


934 திருக்கோயி லில்லாத திருவி லூருந்௿
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்௿
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்௿
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்௿
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்௿
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்௿
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்௿
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.
6.95.5


935 திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்௿
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்௿
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்௿
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்௿
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்௿
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்௿
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்௿
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
6.95.6


936 நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்௿
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்௿
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்௿
மறைநான்கு மானாயா றங்க மானாய்௿
பொன்னானாய் மணியானாய் போக மானாய்௿
பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை௿
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்௿
ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.
6.95.7


937 அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்௿
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்௿
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்௿
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்௿
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்௿
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே௿
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ௿
எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.
6.95.8


938 குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்௿
குற்றமே பெரிதுடையேன் கோல மாய௿
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்௿
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற௿
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்௿
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்௿
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்௿
என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.
6.95.9


939 சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து௿
தரணியொடு வானாளத் தருவ ரேனும்௿
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்௿
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்௿
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்௿
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்௿
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்௿
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.
6.95.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.96 தனி - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


940 ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்௿
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்௿
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்௿
தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை௿
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்௿
மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்௿
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்௿
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.
6.96.1


941 முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார்௿
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்௿
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்௿
செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்௿
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்௿
சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்௿
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்௿
அடியேனை ஆளுடைய அடிக ளாரே.
6.96.2


942 முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு௿
மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்௿
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப௿
அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்௿
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்௿
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்௿
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்௿
சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.
6.96.3


943 பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்௿
பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்௿
அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்௿
அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்௿
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்௿
கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்௿
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்௿
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.
6.96.4


944 அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்௿
அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்௿
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்௿
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்௿
மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்௿
மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்௿
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்௿
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.
6.96.5


945 பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்௿
பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்௿
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்௿
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்௿
வாரடங்கு வனமுலையார் மைய லாகி௿
வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்௿
ஊரடங்க ஒற்றிநகர் பற்றிக் கொண்டார்௿
உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.96.6


946 அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்௿
ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்௿
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்௿
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்௿
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்௿
மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்௿
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்௿
சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.
6.96.7


947 படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்௿
பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்௿
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்௿
கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்௿
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்௿
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்௿
இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே௿
என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே.
6.96.8


948 எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்௿
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்௿
மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார்௿
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து௿
உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்௿
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்௿
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்௿
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.
6.96.9


949 சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்௿
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்௿
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்௿
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்௿
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்௿
காபால வேடங் கருதிக் கொண்டார்௿
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்௿
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.96.10


950 குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்௿
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்௿
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்௿
தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்௿
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்௿
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி௿
இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்௿
இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.96.11
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.97 திருவினாத் - திருத்தாண்டகம்
௿

திருச்சிற்றம்பலம்


951 அண்டங் கடந்த சுவடு முண்டோ ௿
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ ௿
பண்டை யெழுவர் படியு முண்டோ ௿
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ ௿
கண்ட மிறையே கறுத்த துண்டோ ௿
கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ ௿
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.1


952 எரிகின்ற இளஞாயி றன்ன மேனி௿
இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ ௿
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ ௿
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ ௿
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ ௿
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ ௿
சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.2


953 நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ ௿
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ௿
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ ௿
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ ௿
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ ௿
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ ௿
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ ௿
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.3


954 பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ ௿
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ ௿
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ ௿
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ ௿
கண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ ௿
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ ௿
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ ௿
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.4


955 நீறுடைய திருமேனி பாக முண்டோ ௿
நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ ௿
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ ௿
கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்௿
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ ௿
அதனருகே பிறையுண்டோ அளவி லாத௿
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ ௿
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.97.5


956 பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்௿
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்௿
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்௿
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்௿
கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன்௿
கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன்௿
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்௿
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.
6.97.6


957 அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்௿
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்௿
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்௿
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்௿
கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்௿
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்௿
வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன்௿
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.
6.97.7


958 நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்௿
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்௿
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்௿
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்௿
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்௿
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்௿
ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்௿
இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.
6.97.8


959 விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு௿
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு௿
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு௿
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு௿
அரையுண்ட கோவண ஆடை யுண்டு௿
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு௿
இரையுண் டறியாத பாம்பு முண்டு௿
இமையோர் பெருமா னிலாத தென்னே.
6.97.9


960 மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி௿
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்௿
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்௿
ஓரூர னல்லனோ ருவம னில்லி௿
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்௿
அவனருளே கண்ணாகக் காணி னல்லால்௿
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்௿
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.
6.97.10


961 பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்௿
புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்௿
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்௿
மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்௿
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னை௿
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்௿
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்௿
சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.
6.97.11
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.98 திருமறுமாற்றத் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


962 நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்௿
நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்௿
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்௿
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை௿
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான௿
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்௿
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்௿
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.
6.98.1


963 அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்௿
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்௿
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி௿
உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே௿
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்௿
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்௿
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்௿
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.
6.98.2


964 வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்௿
மாதேவா மாதேவா என்று வாழ்த்தி௿
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்௿
நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங்௿
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்௿
கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம்௿
பாராண்டு பகடேறித் திரிவார் சொல்லும்௿
பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.
6.98.3


965 உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்௿
உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே௿
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்௿
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்௿
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்௿
நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற்௿
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட௿
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.
6.98.4


966 என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்௿
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை௿
சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்௿
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்௿
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே௿
உறுபிணியார் செறலொழிந்திட் டோ டிப் போனார்௿
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்௿
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.
6.98.5


967 மூவுருவின் முதலுருவாய் இருநான் கான௿
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்௿
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்௿
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்௿
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே௿
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான௿
காவலரே யேவி விடுத்தா ரேனுங்௿
கடவமலோங் கடுமையொடு களவற் றோமே.
6.98.6


968 நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்௿
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி௿
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி௿
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்௿
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்௿
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்௿
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்௿
பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே.
6.98.7


969 ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னை௿
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க௿
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்௿
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற௿
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்௿
நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன௿
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே௿
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.
6.98.8


970 சடையுடையான் சங்கக் குழையோர் காதன்௿
சாம்பலும் பாம்பு மணிந்த மேனி௿
விடையுடையான் வேங்கை யதள்மே லாடை௿
வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த௿
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்௿
உம்மோடு மற்று முளராய் நின்ற௿
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்௿
பாசமற வீசும் படியோம் நாமே.
6.98.9


971 நாவார நம்பனையே பாடப் பெற்றோம்௿
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்௿
ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்௿
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட௿
தேவாதி தேவன் சிவனென் சிந்தை௿
சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து௿
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலுங்௿
குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே.
6.98.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6.99 திருப்புகலூர் - திருத்தாண்டகம்௿

திருச்சிற்றம்பலம்


972 எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ௿
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்௿
கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்௿
கழலடியே கைதொழுது காணி னல்லால்௿
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்௿
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்௿
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.1


973 அங்கமே பூண்டாய் அனலா டினாய்௿
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்௿
பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்௿
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்௿
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்௿
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்௿
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்௿
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.
6.99.2


974 பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்௿
பளிக்குக் குழையினாய் பண்ணார் இன்சொல்௿
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்௿
மான்மறிகை யேந்தினாய் வஞ்சக் கள்வர்௿
ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்௿
அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை௿
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.3


975 தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்௿
சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே௿
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்௿
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்௿
அருளாகி ஆதியாய் வேத மாகி௿
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்௿
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.4


976 நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்௿
நீங்காமை வைத்துகந்த நீதி யானே௿
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே௿
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா௿
காரேறு முகிலனைய கண்டத் தானே௿
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த௿
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.5


977 விரிசடையாய் வேதியனே வேத கீதா௿
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்௿
திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவே௿
திருவாரூர்த் திருமூலத் தான மேயாய்௿
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்௿
வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்௿
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.6


978 தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்௿
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று௿
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி௿
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்௿
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்௿
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்௿
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.7


979 நெய்யாடி நின்மலனே நீல கண்டா௿
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே௿
மையாடு கண்மடவாள் பாகத் தானே௿
மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்௿
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை௿
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று௿
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.8


980 துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்௿
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்௿
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்௿
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே௿
அன்ன நடைமடவாள் பாகத் தானே௿
அக்காரம் பூண்டானே ஆதி யானே௿
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.9


981 ஒருவனையு மல்லா துணரா துள்ளம்௿
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற௿
இருவரையும் மூவரையும் என்மே லேவி௿
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்௿
கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்௿
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற௿
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்௿
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.10
௿
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த ௿
தேவாரப்பதிகங்கள்௿ ஆறாம் திருமுறை முற்றும் .


This webpage was last updated on 16 October 2003